உடலில் பித்தம், மோகம் மூலச் சூட்டாலான மலக்கட்டு நீங்க
1 அருகு, ஆமணக்கு எலுமிச்சை, கடுக்காய், கரிச்சாலை, கற்றாழை, கொத்துமல்லி (தனியார்), சீரகம், நெல்லி, பொண்ணாங்கன்னி, வில்வம் போன்ற இயற்கை உணவே இதமான மருந்தாகும்.
2. அதிக நேரம் ஆழ்ந்த பார்வையாக (கம்ப்யூட்டரில்) வேலை பார்ப்பவர்கள் தொடர்ச்சியாக அமராமல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தொலைவில் உள்ள பொருளைப் பார்த்து கண்ணை இலகுவாக்குவதும்,
கண்களைக் கழுவுவதும் அவற்றை புத்துணர்ச்சி ஆக்கும். 3. துண்டு வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைத்து 10 நிமிடம்
4. சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு சேர்த்து பருக, கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியடைவதுடன், உடலில் உஷ்ணம் குறையும்.
5. சிறுகீரையை வாரம் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து பார்வை பிரகாசமும் ஆகும்.
6. பனை மரத்தின் வேரை நறுக்கிப் போட்டு, அதனுடன் இரண்டு பங்கு தண்ணீர் விட்டு வெயிலில் வைத்த நீரை காலை, மதியம், மாலை ஆக மூன்று வேளையும் அருந்திவர கண்நோய்கள் எதுவும் வராது.
7. கல்யாண முருங்கை அல்லது சாதாரண முருங்கை கீரையை சமையலில் சேர்த்து சாப்பிட்டாலும் கண்நோய்கள் வராது.
8. பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைந்து கண் நோய்கள் அகன்றுவிடும்.
9. செம்பருத்தி பூக்களை தயிர்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பிறகு குளித்து வந்தால் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் குணமாவதுடன் தீராத தலைவலியும் நீங்கும்.
10. அருகம்புல்லை இடித்து பிளிந்த சாற்றைக் கண்ணுக்குள் பிளிய கண்நோய் தீரும். அருகம்புல் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண்நோய், கண்களில் நீர் வடிதலுடன் தலைவலியும் தீரும்.
11. கடுகுரோணி அல்லது படிகாரத்தைப் பொறித்து தூள் செய்து
சீசாவில் பத்திரப்படுத்தி அதில் 3 அரிசி எடை நாளை தாய்ப்பாலில்
கஷ்ந்து கண்ணில் 4 துளிகள் வீதம் விட கண்வலி, புலை தள்ளுதல்
குணமாகும்.
12. வெங்காய சாற்றை சமஅளவு விளக்கெண்ணெயில் (ஆமணக்கு எண்ணெய்) கலந்து அடுப்பில் ஏற்றி நன்றாக காய்ச்சி, ஆறியவுடன் வடிகட்டி சுத்தமான கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தி அதில் ஒரு சொட்டு கண்ணில் விட்டால் போதும் கண்வலியும், கண் சிவப்பும் நீங்கும்.
13. மிளகு அரைத்து முசு முசுக்கை இலை சாறெடுத்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சியோ அல்லது ஒரு வாரம் வெயிலில் காய வைத்தோ, பிறகு வாரம் இருமுறை இந்த எண்ணெயில் குளித்துவர நாளடைவில் கண் சார்பான வெப்பமும், எரிச்சலும் தீரும்.
14. நந்தியாவட்டை பூவை சுத்தமான வெள்ளைத் துணியில் முடிந்து அந்த முடிச்சைத் தாய்ப்பாலில் ஊறவைத்து சில துளிகள் கண்ணில் பிழிந்து வர ஒரு வாரத்தில் கண்ணில் பூ விழுந்தால் மறைந்துவிடும். நந்தியாவட்டை பூவைக் கொண்டு வந்து கண்களில் ஒத்தடம் கொடுக்க கண்வலி நீங்கும்.
15. பொன்னாங்கண்ணி கீரையை தினமும் நுவையல் செய்து சாப்பாட்டில் சாப்பிடவோ, உப்பில்லாமல் வேக வைத்து 40 நாட்கள் உண்ண கண்நோய், கருவிழி நோய் தீரும்.
No comments:
Post a Comment