தலைவலி - ஐலதோஷம் (சளி) கபம் கரைய
1. செலவின்றி தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல்
துளக்கியவுடன், வாயைச் சுத்தம் செய்யும் போது முதுகை நன்றாக
வனைத்து, அவ்வாறு செய்யும் போது உணவு குழல் வழியாக உள்ளே
இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்தநீர் வெளியேற்றம்
பல நோய்கள் உருவாவதை தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக
வெளியேறும். எனவே தினசரி (சளித்தொல்லை இருந்தாலும், இல்லை
வெளியேற்றினால் பல்வேறு நோய்களுக்கான மூல காரணங்களும்,
வெளியேற்றப்பட்டு மூச்சுவழி காற்றுப் பாதையும் சரியாகிவிட்டால்
இருதயம், வயிறு, சிறுநீர் உபாதைகள் வரை நீங்கி உடல்ஆரோக்கியம்
இயற்கையாகவே சரி செய்யலாம்.
2.அ) நாட்டு வெங்காயம் இரண்டு, மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டாலும்,
ஆ) கொண்டக்கடலையை லேசாக வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர தலைவலி, தலைபாரம், இருமல் தீரும். 3. பணங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பொடியாக்கி
அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர மழை மற்றும் குளிர்
காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும். 4. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும்.
குணமாகும்.
5. துளசி இலைசாறு, வில்வ இலைசாறு வகைக்கு 100 மி.லி. எடுத்து, அத்துடன் 200 மி.லி. தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறுகண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும்.
6. அ) பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப்போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இதனை இரவில் தூங்கப் போகிறதுக்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும்.
நலம் தரும் நாட்டு மருந்துகள்
9
ஆ) எளிமையான மருந்து மிளகை ஊசியால் குத்தி தீயில் சுட்டு அதனுடைய புகையை மூக்கு மூலியம் உள்ளுக்கு இழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும்.
7. நொச்சி இலையை தலையணைக்குள்ளே பரப்பி வச்சி தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி, சனிப் பிரச்சினையும் விலகி விடும்.
8. திப்பிலி ஒரு பங்கு & துளசி இலை 3 பங்கு என்ற அளவில்
பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும்.
9. மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து, இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சாப்பிட துளி அகலும். 10. தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை, மாலை 2
நாட்கள் சாப்பிட சளி அகலும்.
11. சூடான சுக்கு, மல்லி காப்பியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும்.
12.இஞ்சிச் சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி, சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தைலத்தை நன்றாகத் தேய்த்து 20 நிமிடம் ஊறியதும், பயத்தமாவு & அரப்புத்தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால், தலைவலியை இந்த தைலம் குணப்படுத்தும்.
13. சித்தரத்தை, சுக்கு, மிளகு, சதகுப்பை, திப்பிலி இவைகளை சமஅளவு எடை எடுத்து நன்கு பொடித்து கால் லிட்டர் நீரில் போட்டு அது பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி மூன்று பங்காக்கி, ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் மேற்கூறிய நோய்கள் நீங்கும்.
14. முள்ளங்கி சாறு அல்லது மாதுளம்பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.
கண்
அ) கண்வலி வரக் காரணங்கள் பல உள்ளன. உடலில் பித்த மேகநீர் மூலச்சூட்டு - மலக்கட்டு போன்ற காரணங்களால் கண் நோய் வரும். தலைவரட்சி - ஆழ்ந்த பார்வை
ஆ) உடலில் பித்தாதிக்கம் அதிகமானால் கருவிழியில் பாதி உளுந்து அளவில், வெள்ளையாகத் தோன்றும். வெள்ளை விழியும் நீர் படர்ந்து நீர் வழியும்.
ஐ மோகநீர் - மிக்க பெண்ணிச்சை மூலச்சூட்டின் மிகுதியாகும்.
ஈ) மலக்கட்டு மற்றும் ஆழ்ந்த பார்வையால் கண்ணைச் சுற்றி வடுவு (வறை) உண்டாகி அரிக்கும். கண் சிவந்து வலிக்கும்.
உ) மாலைக்கண் : மாலை நேரத்தில் இருள் பிடித்தது போல் காணும்
No comments:
Post a Comment